இது குறித்து கல்வி அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கிலேயே புதிய பட்டதாரி ஆசிரியர்கள் சேவையில் இணைக்கப்படவுள்ளனர்.
இந்த பற்றாக் குறையை நிவர்த்தி செய்வதற்காக வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக பட்டதாரி ஆசிரியர்களிடம் விண்ணப்பம் கோரப்பட்டு அவ்விண்ணப்பங்களை பரிசீலனை செய்த பின்பு சிறந்த தகைமை கொண்ட பட்டதாரிகளுக்கு இந் நேர்முகப் பரீட்சைக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் பாடசாலைக்களுக்கான மூன்றாம் வாரம் ஆரம்பிக்கப்படும்போது இப்புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்படவுள்ளதுடன் பற்றாக்குறை காணப்படும் பாடங்களுக்கான 850 ஆசிரியர்கள் சேவையில் அமர்த்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். (வீரகேசரி)