Friday, August 9, 2013

பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கு நேர்முகப் பரீட்சை இம்மாதம் 19ம் திகதி முதல்

தேசிய பாட­சா­லை­களில் ஆசி­ரியர் பற்­றாக்­கு­றையை நிவர்த்தி செய்யும் வண்ணம் பட்­ட­தாரி ஆசி­ரி­யர்­க­ளுக்­கான நேர்­முகப் பரீட்சை இம்­மாதம் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக கல்வி அமைச்சர் பந்­துல குண­வர்­தன தெரி­வித்­துள்ளார்.
இது குறித்து கல்வி அமைச்சர் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

சிங்­களம், தமிழ் மற்றும் ஆங்­கில மொழி மூலங்­களில் நிலவும் ஆசி­ரியர் பற்­றாக்­கு­றையை நிவர்த்தி செய்யும் நோக்­கி­லேயே புதிய பட்­ட­தாரி ஆசி­ரி­யர்கள் சேவையில் இணைக்­கப்­ப­ட­வுள்­ளனர்.

இந்த பற்­றாக்­ கு­றையை நிவர்த்தி செய்­வ­தற்­காக வர்த்­த­மானி அறி­வித்­தலின் ஊடாக பட்­ட­தாரி ஆசி­ரி­யர்­க­ளிடம் விண்­ணப்பம் கோரப்­பட்டு அவ்­விண்­ணப்­பங்­களை பரி­சீ­லனை செய்த பின்பு சிறந்த தகைமை கொண்ட பட்­ட­தா­ரி­க­ளுக்கு இந் நேர்­முகப் பரீட்­சைக்கு அழைப்பு விடுக்­கப்­படவுள்­ள­தாக அமைச்சர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

அத்­துடன் பாட­சா­லைக்­க­ளுக்­கான மூன்றாம் வாரம் ஆரம்­பிக்­கப்­ப­டும்­போது இப்­பு­திய பட்­ட­தாரி ஆசி­ரி­யர்­க­ளுக்கு நிய­மனம் வழங்­கப்­ப­ட­வுள்­ள­துடன் பற்றாக்குறை காணப்படும் பாடங்களுக்கான 850 ஆசிரியர்கள் சேவையில் அமர்த்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். (வீரகேசரி)
Disqus Comments