Tuesday, August 6, 2013

நான் முதலமைச்சர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது - தயாசிறி ஜயசேகர

அண்மையில் வெலிவேரிய ரதுபஸ்வல பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நியாயமான விசாரணைகளை அரசாங்கம் நடத்தும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் தவறிழைத்தவர்கள் யாராயினும் தண்டிக்கப்படுவார்கள் என தான் நம்புவதாகவும் அவர் டிவி தெரணவுக்கு வழங்கிய செவ்வியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

எது எவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பில் தான் கவலையடைந்துள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தபோது அவர் அரசாங்கத்தை கவிழ்க்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகவும் இதற்காக சரத் பொன்சேகாவுடன் இணைந்து செயற்பட்டதாகவும் குறிப்பிட்ட தயாசிறி ஜயசேகர, ஆனால் முடிவில் தன்னால் அதை செய்ய இயலாமல் போனதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடமேல் மாகாண சபையில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று தான் முதலமைச்சர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது எனவும் அவர் அந்த செவ்வியில் கூறியுள்ளார்
Disqus Comments