Friday, November 1, 2013

கத்தாரில் கிணற்றில் இறங்கி சுத்தம் செய்த 4 இந்தியா்கள் மூச்சு திணறி பரிதாப மரணம்

அரபு நாடான கத்தார் தலைநகர் டோகாவில் நேற்று ஆழ்துளை கிணறை சுத்தம் செய்யும் பணியில் இந்தியாவை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்தனர். அப்போது அவர்கள் ஆழ்துளை கிணற்றில் இறங்கி சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் 4 பேரும் மூச்சு திணறி பரிதாபமாக பலியானார்கள்.

போலீஸ் விசாரணையில் ‘பலியான 4 இந்தியர்களும் கேரள மாநிலத்தை சேர்ந்த இசாக் (வயது26), பாசில் (30), முனீர் (20) மற்றும் முகம்மது ஆகியோர்’ என்பது தெரியவந்தது.

இவர்கள் அனைவரும் அந்த நாட்டில் தனியார் நிறுவனத்தில் காண்டிராக்ட் அடிப்படையில் வேலை பார்த்து வந்தனர்.
Disqus Comments