வீரகேசரி, விடிவெள்ளி மற்றும் மெட்ரோ நியுஸ் ஆகிய பத்திரிகைகளின்
மதுரங்குளி நிருபராகவும் விருதோடை 601 கிராம சேவகா் பிரிவின் கிராம சேவை அதிகாரியுமான
எம்.எஸ். முஸப்பிரின் வீடு நேற்று 06ஆம் திகதி அதிகாலை உடைக்கப்பட்டு
பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன. இது தொடர்பில் குறித்த ஊடகவியலாளர்
புத்தளம் பொலிஸில் முறைப்பாடு செய்துளளார்.
சம்பவம் இடம்பெற்ற நேற்றைய தினம் குறித்த ஊடகவியலாளர் தனது குடும்பத்துடன்
வட்டக்கண்டலிர் உள்ள உறவினர் ஒருவருடைய வீட்டிற்குச் சென்றுள்ளார். இந்நிலையிலேயே வீடு
உடைக்கப்பட்டு இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
புத்தளம் நகரில் உள்ள குறித்த ஊடகவியலாளரின் வீட்டின் பின்வழியாக
உட்புகுந்த கொள்ளையர்கள் தங்க நகைகளை எடுத்துச் செல்லும் நோக்கிலேயே
வீட்டை சோதனையிட்டிருக்கிறார்கள். எனினும் தங்க நகைகள் எதுவுமே இல்லாத
நிலையில் அங்கிருந்த பெறுமதிமிக்க இரண்டு மடிக்கணணிகள், டிஜிடல் கமரா, கேஸ்
சிலின்டர் என்பனவற்றை எடுத்துச் சென்றுள்ளனர்.
இக்கொள்ளைச் சம்பவம் பற்றி புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.