Saturday, June 13, 2015

237 பாராளுமன்ற ஆசனங்களுடனான 20வது திருத்தச் சட்டத்திற்கு அனுமதி


237 ஆசனங்களுடனான தேர்தல் முறை மாற்றம் குறித்த 20வது திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது என, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. 

இதன்படி தற்போது 225 ஆக காணப்படும் பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 237 ஆக அதிகரிக்கவுள்ளது. 

இதேவேளை அமைச்சரவை அனுமதி கிட்டியுள்ள குறித்த சட்டமூலம் இன்று வர்த்தமானியில் சேர்க்கப்படவுள்ளது. 
Disqus Comments