சிலாபம் மாரவில பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
ரயில் கடவை கதவு மூடியிருந்த சந்தர்ப்பத்தில் ரயில் கடவையை துவிச்சக்கர வண்டியில் கடந்த இருவரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பிலிருந்து புத்தளம் நோக்கி பயணித்து கொண்டிருந்த ரயிலில் துவிச்சக்கரவண்டி மோதி விபத்து சம்பவித்துள்ளது.
நேற்று இரவு 7மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார்.
இந்த விபத்தில் 51 மற்றும் 56 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளனர்.