Saturday, June 27, 2015

இனி எல்லா நோபாலும் பிரி ஹிட் ஆடலாம்- ஐ.சி.சி. விதிமுறை மாற்றம்

ர்படாசில் நடந்த ஐ.சி.சி. ஆண்டிறுதி பொதுக்குழுக் கூட்டத்தில் கிரிக்கெட் போட்டியில் சில முக்கிய விதிமுறைகளை மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதில் முக்கியமாக 3 விதிமுறைகள் மாற்றம் கண்டுள்ளது. முக்கியமாக பேட்டிங் பவர் பிளே ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டிகளில் 15 மற்றும் 40வது ஓவர்களில் இதுவரை பேட்டிங் பவர் பிளே இருந்து வந்தது.  
அதோடு கடைசி 10 ஓவர்களில் 30 அடி சர்க்கிளுக்கு வெளியே 5 பீல்டர்களை நிறுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கு முன் 41 முதல் 50 ஓவர்கள் வரை 4 பீல்டர்களே நிறுத்தப்பட்டு வந்தனர். 

மேலும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இனி எல்லா 'நோபால்' பந்துகளையும் பிரி ஹிட்டாக ஆடுவதற்கும் விதிமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜுலை 5ஆம் தேதி முதல் இந்த விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன.
Disqus Comments