Saturday, June 27, 2015

மஹிந்த போட்டியிடுகின்றார் என்பதை முகநூல் ஊடாக உறுதிப்படுத்தினார் நாமல் ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் சிறிலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் அவசர சந்திப்பொன்று தற்போது இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் பொது தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானங்கள் இக்கலந்துரையாடலின் பின்னர் வெளியிடப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
எப்படியிருப்பினும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவருடைய குழுவுக்கு வேட்பு மனு கிடைக்கவுள்ளதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ள
அதேவேளை ஜனாதிபதி தேர்தளின் பின்னர் நாமல் ராஜபக்ஷ இதுவரை மகிந்தவுக்கு சார்பாக மேடைகளிலோ, சமூக வலைகளிலோ ஆதரவு தெரிவிக்காமல் இருந்து வந்த நிலையில் பாராளுமன்றம் கலைக்கபட்ட நிலையில் இன்று காலை அவரின் முகநூல் பக்கத்தில் மகிந்த ராஜபக்ஷவின் படத்தை பதிவிட்டு “நாம் இன்னுமொருமுறை தாய்நாட்டுக்காக எழும்புவோம் ” என குறிப்பிட்டுள்ளது. மகிந்த ராஜபக்ஷவின் அரசியல் பிரவேசத்தின் அறிகுறியாக இருக்கலாம் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
Disqus Comments