எதிா்வரும் பாராளுமன்ற தேர்தலில் புத்தளம் மாவட்ட சார்பாக PPAF கூட்டணி ஒட்டகச்சின்னம், சுயேட்சை இலக்கம் 4 ல் களமிறங்க தீர்மானித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி போன்ற பிரதான கட்சிகளுடன் 26 வருடங்களாக புத்தளத்தில் இழந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் முயற்சித்துவரும் PPAF கூட்டணியினது வேட்புமனு(13-07-2015) அன்று தாக்கல் செய்யப்பட்டது.
இக்கூட்டணி சார்பாக இன்ஜினியர் ஜிப்ரி, கல்பிட்டி இன்பாஸ், மதுரங்குளி இப்திகார், புத்தளம் முன்னாள் நகர சபை தலைவர் கே.ஏ.பாயிஸ், முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஹ்யா, யாழ்பாணம் உவைஸ், நில அளவையாளர் நஜீப், கல்பிட்டி ஹுசைன்தீன், சிலாபம் நவாஸ்தீன் மற்றும் லாபீர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.