Friday, June 1, 2012

சனத் தொகை கணக்கெடுப்பில் குளறுபடி முஸ்லிம்களின் எண்ணிக்கையில் பலத்த சந்தேகம்

இவ்வருடம் அதாவது 2012.02.27 நடத்தப்பட்ட 14வது குடிசன மதிப்பீட்டின் படி முஸ்லிம்களின் தொகை 15 இலட்சம் என கூறப்பட்டுள்ளமை பலத்த சந்தேகங்களை  ஏற்படுத்தியுள்ளது. கடந்த குடிசன மதிப்பீடு உரிய முறையில் இடம்பெறவில்லை என பிரதமர் விக்ரம நாயகெவின் மகனும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான விதுர விக்ரமநாயக்கே குற்றம் சுமத்தியுள்ளார்

சனத்தொகை கணக்கெடுப்பின் படி முஸ்லிம்களின் தொகை 15 இலட்சம் என கூறுவது நம்புவதற்கு கடினமான விடயம் என முஸ்லிம் களின் தரப்பில் சந்தேகம் தெரிவிக்கப்பாடுகின்றது. 

இது தொடர்பாக புள்ளி விபரவியல் திணைக்களத்தை தொடர்பு கொண்ட போது இந்த தகவலில் எந்த வித உண்மையும் கிடையாது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் எந்த விதமான உத்தியோக பூர்வமான தகவல்களும் வெளியாக வில்லை. ஆகவே இந்த தகவலை யாரும் நம்பத்தேவையில்லை என்று தெரிவித்தார் 

Disqus Comments