Sunday, August 24, 2014

மூன்று பிள்ளைகளின் தாய் தூக்கில் தொங்கி தற்­கொலை

மூன்று பிள்­ளை­களின் தாயொ­ருவர் தூக் கிட்டு தற்­கொலை செய்து கொண்­டுள்ள சம்­ப­வ­மொன்று களு­வாஞ்­சிக்­குடி பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட எருவில் கிரா­மத்தில் இடம் ­பெற்­றுள்­ளது.
 
எருவில் கண்­ணகி வித்­தி­யா­ல­யத்­துக்கு அருகில் வசித்து வரும் இளை­ய­தம்பி யாழினி (வயது 31) என்­ப­வரே தற்­கொலை செய்து கொண்­ட­வ­ராவார்.
 
சம்­பவம் பற்றி தெரிய வரு­வ­தா­வது,
 
இளை­ய­தம்பி யாழி­னியின் கணவர் கட்­டா ரில் தொழில் புரிந்து வரு­கிறார். அவ­ருடன் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இரவு தொலை­பே­சியில் அவர் கதைத்­துள்ளார். இந்­நி­லையில் அவ­ரது பத்து மாதக்­கு­ழந்தை இரவில் எழுந்து அழு­துள்­ளது. குழந்தை அழுதும் தாய் எழும்­பாத கார­ணத்தால் மற்­றைய இரு குழந்­தை­களும் எழுந்து பார்த்த போது தாய் தூக்கில் தொங்­கு­வதை கண்­டுள்­ளனர்.
 
இத­னை­ய­டுத்து வெளியில் உறங்­கிக்­கொண்­டி­ருந்த தமது அம்­மப்­பா­விடம் அவர்கள் சென்று சம்­ப­வத்தை தெரி­வித்­துள்­ளனர். அவர் அறையை வந்து பார்த்த போது மகள் தூக்கில் தொங்கிக் கொண்­டி­ருப்­பதை அவ­தா­னித்­துள்ளார்.
 
இச்சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Disqus Comments