Saturday, September 20, 2014

ஊவா மாகாண சபைத் தேர்தல்; வாக்குப் பதிவுகள் நிறைவு

ஊவா மாகாண சபைத் தேர்தலின் வாக்குப் பதிவு நடவடிக்கைகள் நிறைவுபெற்றுள்ளன.

பதுளை மாவட்டத்தில் 60 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி ரோஹண கீர்த்தி திசாநாயக்க தெரிவிக்கின்றார்.

மொனராகலை மாவட்டத்தில் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி அந்தோனிபிள்ளை பத்திநாதன் குறிப்பிட்டுள்ளார்.

இரு மாவட்டங்களிலும் இன்றைய வாக்குப் பதிவு சுமூகமான முறையில் நிறைவுபெற்றுள்ளது.
Disqus Comments