Sunday, July 5, 2015

மையவாடி காணிக்கு சுற்று வேலி அமைக்க நிதி உதவி கோரல்

(Mohamed Safras ) இடம்பெயர்ந்த மக்கள் வாழும் நுரைச்சோலை, சஞ்சீதாவத்தை கிராமத்தின் ஜனாஸாக்கள் நீண்ட காலமாக நுரைச்சோலை பெரிய பள்ளி மைய வாடியிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டு வருகின்றன. அண்மைக்காலமாக இம்மையவாடியில் இடப்பற்றாக்குறை ஏற்பட்ட காரணத்தினால் சஞ்சீதாவத்தை கிராமத்திற்கென மையவாடி காணி ஒன்று கொள்வனவு செய்யப்பட்டது. இக்காணிக்கு சுற்று வேலி அமைக்கப்பட்டால் மாத்திரமே ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கான அனுமதி பிரதேச சபையினால் வழங்கப்படும்.

மையவாடிக்கு சுற்று வேலி அமைப்பதற்கான போதிய நிதி வசதியை பள்ளி நிருவாகம் கொண்டிருக்கவில்லை. இந்த மையவாடி இக்கிராம மக்களின் அவசர தேவையாக உள்ளது. எனவே வசதியுள்ளவர்கள் அரசியல்வாதிகள் வெளிநாடுகளில் இருப்போர் அல்லது நிருவனங்கள் முன்வந்து இதை செய்து தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

- பள்ளி நிருவாகம்

வங்கி விபரம் 
Account No : 5786493
Bank of Ceylon
Nuraicholai Branch



Disqus Comments