சகல போயா தினங்கள் மற்றும் விசேட தினங்களில் மதுபானசாலைகள் மூடப்பட வேண்டும் என இலங்கை மதுவரித்திணைக்களம் அறிவித்துள்ளது.
2017 ஆம் ஆண்டில் மதுபானசாலைகள் மூடப்பட வேண்டிய தினங்கள் குறித்த அட்டவணையை வௌியிட்டுள்ள மதுவரித் திணைக்களம் இ்ந்த அறிவித்தலையும் விடுத்துள்ளது.
இதன்படி, போயா தினம், சுதந்திர தினம், புத்தாண்டு தினம் மற்றும் அதற்கு முதல் தினம், ரம்ழான் பண்டிகை, மது ஒழிப்பு தினம், மற்றும் நத்தார் தினம் உள்ளிட்ட விசேட தினங்களில் மதுபான சாலைகள் மூடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.