முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை பிரதமராக்கும் நோக்குடன் கண்டி மத்திய சந்தைக்கு முன் நடைபெற்ற கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தடையையும் மீறி பலர் கலந்துகொண்டனர். மத்திய மாகாண முன்னாள் ஆளுனர் டிக்கிரி கொப்பேகடுவ, கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம உட்பட மாகாண சபைகள், உள்ளுராட்சி மன்றங்களை சேர்ந்த 87 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
மக்கள் ஐக்கிய முன்னணி,தேசிய சுதந்திர முன்னணி,ஜனநாயக இடதுசாரி முன்னணி, தூய்மையான ஹெல உறுமய உட்பட பல்வேறு கட்சிகள் இணைந்து முன்னாள் ஐனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக்க வேண்டும் எனக்கோறி நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்டு வரும் கூட்டத் தொடரின் இரண்டாவது கூட்டமாகவே நேற்று கண்டியில் இடம்பெற்றது.
இங்கு முன்னாள் ஜனாதிபதியின் ஆசிச் செய்தியை வழங்கிய முன்னாள் மத்திய மாகாண ஆளுனர் டிக்கிரி கொப்பேகடுவ, தாய்நாட்டை பாதுகாப்பதற்காக முன்வந்தவர்களுக்கு எவ்வித தண்டணை கிடைத்தாலும் அது ஒரு ஆசீர்வாதமாகும். எனவே எவ்வித தடையையும் பொருட்படுத்தாது தாய்நாட்டை பாதுகாப்பதற்கு முன்வரத் தயாராக உள்ளதாகவும் அதற்காக மக்கள் கூறும் எத்தகைய பாத்திரத்தையும் ஏற்கத் தயார் எனத்தெரிவித்துள்ளதாகவும் வாசித்துக்கட்டினார்.
வாசுதேவ நானாயக்கார
முன்னாள் அமைசச்ர் வாசுதேவ நானாயக்கார இங்கு கருத்து தெரிவிக்கையில, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்கள் அறிவற்றவர்களாக செயற்படுகின்றனர். நாங்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசியல் களத்தில் இடம் பெற்றுக்கொடுக்கவே முன்வந்துள்ளதாக தவறாக தெரிவிக்கின்றனர். அது முற்றிலும் பொய்யானதாகும். மஹிந்த ராஜபக்ஷ இந்நாட்டில் அதி உயர் பதவியை வகித்துள்ளார். அவருக்கு வேறு எப்பதவியையும் எங்களால் பெற்றுக்கொடுக்க முடியாது. நாங்கள் முயற்சிப்பது இந்நாட்டை பாதுகாப்பதறகாகும். ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி அங்கத்தவர்களுக்கு இக்கூட்டத்திற்கு சமூகம் அளிப்பதற்கு கட்சி தடை விதித்துள்ளது. ஆனால் அத்தடைகளை மீறி நூற்றுகணக்கில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் சமூகம் தந்துள்ளனர். இறுதியாக தடயை விதித்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தனித்து விடும் அபாயம் உள்ளது என்றும் தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷ நாட்டுக்கும் மக்களுக்கும் தேவையே ஒழிய மஹிந்தவிற்கு ஆட்சிக்கு வர எவ்வித தேவையும் இல்லை. இன்று நாடு ஏகாதிபத்திவாதிகள் வசம் சென்றுகொண்டுள்ளது. எமது பலம் ஏகாதிபத்தியவாதிகளிடம் செல்லாது அதனை பாதுகாக்க தைரியம் மிக்க தலைவரான மஹிந்த தேவைப்படுகினறார் என்றும் கூறினார்.
உதய கம்மன்பில
இக்கூட்டத்தில் உரையாற்றிய பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்ததாவது,
வரலாற்று ரீதியாக இலங்கையை ஆண்ட மன்னர்களில் எட்டுப்போ் மட்டுமே நாட்டை ஓரணியில் கொண்டுவந்தனர். 1600 வருட சரித்திரத்தில் எட்டுப்போ். அதில் துட்டகைமுனுவிற்குப் பிறகு ஒரு கொடியின் கீழ் இணைந்தவர் மகிந்த ராஜபக்சவாகும். இவர் ஒரு யுக புருசர். யுகத்தின் தேவைகொண்டவர்.
கடந்த காலங்களில் நடந்த தோ்தல்களில் தோல்வியடைந்தவர்களை சந்திரிக்கா அம்மையார் ஒன்றிணைக்க சென்ற போது அவர்களை தடுக்க ஸ்ரீல.சு.க.வின் செயலாளருக்கு முடியவில்லை. ஆனால் இன்று வெற்றி அடைய நாம் கட்சி அங்கத்தவர்களை அழைத்தால் அதற்குத தடை போடுகிறார். அதாவது அவர் கட்சி தோல்வி அடைவதை விரும்புகிறார். நாம் அப்படியல்ல.
தேசிய அரசு எண்ணக்கரு மூலம் தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர்க்கட்சியாகப் போகிறது. ஏன் தெரியுமா? இன்று எதிர்க்கட்சியாக இருப்பது நாளை ஆளும்கட்சியாக வரலாம் என்பதற்காகவேவயாகும். எனவேதான் தேசிய அரசு என்ற கூட்டு மூலம் ஐ.தே.க.வும். ஸ்ரீல.சு.க சோ்ந்து பிரதமர், உதவிப் பிரதமர் என பதவிகளைப் பிரித்துக்கொள்ள தமிழர் கூட்டணி எதிர்க்கட்சியாகப் போகிறது. அச்சதியை முறியடிக்கவே நாம் புறப்பட்டுள்ளொம். தூய்நாட்டிற்கு ஆபத்து வந்தள்ளது. தாய்நாடிற்கு ஆபத்து வரும் போது தாய்நாட்டைக் காப்பாற்றியவர் தேவை அல்லவா. ஆதனால்தான் நாம் மகிந்தவை ஆட்சியில் அமர்த்தப்போகிறோம் என்றார்.
விமல் வீரவன்ச
மகிந்தவின் எழுச்சியைக் கண்ட அரசு அடுத்த தோ்தலுக்கு சாக்குப் போக்கு சொல்லி காலம் தாழ்த்தி வருகிறது. வெகு விரைவில் தோ்தல் ஒன்று நடக்க மாட்டாது என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
மகிந்த ராஜபக்சவை ஆட்சியில் அமர்த்துவது தொடாபாக கண்டியில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
ரணிலுடன் தேசிய அரசு ஒன்றை அமைக்க யாரும் விரும்பவில்லை. ஏனெனில் தோ்தலில் போட்டியிட்டு வெற்றிபெற முடியாத ஒருவர் பிரதமராக செயற்பட மக்கள் விரும்வில்லை. வெற்றி பெற முடியாத ஒருவர் தந்திரமாக தேசிய அரசு என்ற போர்வையில் ஆட்சி அமைக்க விரும்புகிறார்.
ரணில் விக்கிரமசிங்கவின் கதைகளைக் கெட்கும்போது சிரிப்புத்தான் வருகிறது. யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள வௌிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் தங்கு விடுதியை அரச உடைமையாக்கப் போகிறாராம். அரசின் செலவில் கட்டப்பட்ட கட்டிடம் அரச உடைமையல்லாது வேறு என்ன? இதுகூட அவருக்குத் தெரியாது.
மிந்த ராஜபக்சவால் வென்றெடுக்கப்பட்ட எமது தாயகம் இன்று மறுபக்கம் புறட்டப்படுகிறது. எதிரிகளின் கைகளில் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. லெம்போகினி என்றார்கள், கண்டேனர் கணக்கில் தங்கம் என்றார்கள். இவை எல்லாம் எங்கே. ஆவை எதுவும் கண்டுபிடிக்கப்பட வில்லையே. நலலாட்சி எங்கே போகிறது என்பதை இன்னும் சில நாட்களில் பராத்துக்கொள்ளுங்கள். நுகேொடை கூட்டத்தைக்க கண்டதும் பயந்து விட்டார்கள். நுகேகொடையில் பயந்தவர்களிடம் கூறுகின்றோம் அடிமட்டத்தை எடுத்துக்கொண்டு வாருங்கள். நீளம் எவ்வளவு அகலம் எவ்வளவு என்று அளந்து குறியுங்கள். அதனை சதுரக்கட்டங்களாக்குங்கள். ஒரு சதுரக்கட்டத்தினுள் எத்தனை தலைகள் என்று எண்ணுங்கள். அதனைக் கொண்டு மொத்த எண்ணிக்கையை கணக்கிடுங்கள் என்றார்.
தினேஷ் குணவர்தனா
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை நாம் பிளவுபடுத்தவில்லை. பதிலாக அதனைப் பாதுகாத்து வளர்த்து வந்துள்ளோம் என்று முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்தனா தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியால் பல்வேறு தடைகள் போடப்பட்ட போதும் அக்கட்சியைப் பிரதி நிதித்துவப்படுத்தும் 87 மாகாண சபை அங்கத்தவர்கள் இன்று இம்மேடையில் கலந்து கொண்டுள்ளனர். மகிந்த ராஜபக்சவை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்பதற்காகவே அவாகள் ஒன்று கூடியுள்ளனர். அப்படி என்றால் மகிந்த என்ன செய்தார்? மகிந்த முதலாவதாக பிரிவடையாத ஒரு நாட்டை ஆட்சிசெய்தார். அடுத்ததாக மற்றவர்களால் முடியாது என்று கைவிடப்பட்ட யுத்தத்தை வெற்றி கொண்டார். இதுவே அவர் செய்தவைகளாகும்.
ஆனால் இவை இரண்டையும் செய்ய முடியாத ரணில் இன்று ஆட்சியில் உள்ளார். ரணில், மைத்திரி கூட்டு மூலம் பெரும்பான்மைப் பலத்தைப் பெறமுடியாது. ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இடது சாரிகளுடன் கூட்டுச் சோ்ந்த ஒவ்வொறு காலத்திலும் பெரும்பான்மையைப் பெற்றுள்ளனர்.
நாம் வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டோம். எமக்கு பொதுமக்கள் வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பினர். ஐக்கிய தேசியக் கட்சிக்கு பக்கத்துணையாக நின்று அவர்கள் ஆட்சிபுரிய எம்மை அவ்வாறு அனுப்பவில்லை. எனவே எமது வாக்களர்களின் எதிர்பராப்பை நாம் நிறைவேற்றவேண்டும்.
நாம் ஒரு போதும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை இரண்டாகப் பிரிக்க வில்லை. ஏனெனில் இங்கு இருப்பவர்களில் அனேகர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியைச் சொ்ந்தவர்கள்.
