Wednesday, May 15, 2013

மதுரங்குளி பால்வத்தையைச் சோ்ந்த திருடா் கும்பல் பொலிஸாரால் மடக்கிப் பிடிப்பு

முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரங்குளி பால்வத்தை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில்  இடம்பெற்ற பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களாக கூறப்படும்  4 பேர் அடங்கிய கும்பலை முந்தல் கடந்த திங்கட்கிழமை (13.05.2013) அன்று பொலிஸார்  கைதுசெய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து  நீர் இறைக்கும் இயந்திரங்கள் 4, சேர்விஸ் பன்னும் இயந்திரம், வாகன பற்றரிகள், கிருமிநாசினி விசிறும் டாங்கிகள்,  என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சந்தேக நபர்கள் பாலைச்சோலை பிரதேசத்தினை சேர்ந்தவர்களென ஆரம்ப கட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது. மேற்படி நபர்களிடமிருந்து பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Disqus Comments