Saturday, June 29, 2013

TIMES சஞ்சிகையின் ஜுலை மாத இதழுக்கு இலங்கையில் தடை

(SN)அமெரிக்க ரைம்ஸ் சஞ்சிகையின் ஜூலை மாதம் வெளியீட்டை இலங்கை சுங்க அதிகாரிகளால் தடை செய்துள்ளனர். இந்த இதழில் “பௌத்த பயங்கரவாதத்தின் முகம்” என்ற கட்டுரை பிரசுரமனதை அடுத்தே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ரைம்ஸ் சஞ்சிகையின் ஜுலை மாத வெளியீடு விமான நிலைய சுங்க அதிகாரிகளால் முடக்கப்பட்டது. இந்த கட்டுரை தம்மால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாக சுங்க திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.

அந்த கட்டுரையில் பொதுபல சேனா அமைப்பை கடுங்கோப்பு அமைப்பாக அந்த கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த  இணைப்பு பின் மூலம் சஞ்சிகையை பார்வையிட முடியும்.
Disqus Comments