Monday, September 30, 2013

இனி சிறுவர் தினத்தில் புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் - கல்வி அமைச்சா்

உலக சிறுவர் தினத்தில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகும் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இந்த புதிய நடைமுறை இந்த வருடத்திலிருந்து அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற  2013ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நாளை செவ்வாய்க்கிழமை வெளியாகும் என அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நாளை மறுதினம் புதன்கிழமை வெளியாகும் என பரீட்சைகள் ஆணையளர் கே.என்.புஷ்பகுமார முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Disqus Comments