Monday, September 30, 2013

தெற்கைப் போன்று வடக்கு மக்களை ஏமாற்ற முடியாது என்பதை நிரூபித்த வடமாகாண தேர்தல்! அசாத் சாலி

விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்­களை வைத்து வடக்கில் பிர­சாரம் செய்து வாக்­குகளைப் பெறலாம் என அர­சாங்கம் நினைத்­தமை தவிடு பொடி­யாகி விட்­டது. தெற்கில் செய்யும் ஏமாற்று வேலை­களை அரசு வடக்­கிலும் செய்ய முடி­யாது என்­பதை வடக்கு மக்கள் நிரூ­பித்து விட்­டார்கள். இவ்வாறு அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

இரா­ஜ­கி­ரி­யவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை எதிர்க்­கட்­சி­களின் எதிர்ப்பு இயக்­கத்­தினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வா­று தெரிவித்தார்.

இது தொடர்­பாக தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலை­வரும் மத்­திய மாகாண சபை உறுப்­பி­ன­ரு­மான அசாத் சாலி கருத்துத் தெரி­விக்­கையில்,
நேர்­மை­யான முறையில் தேர்­தலை நடத்­தி­யி­ருந்தால் அர­சாங்கம் படு­தோல்வி அடைந்­தி­ருக்கும்.

ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்சவிற்கு தைரி­ய­மி­ருந்தால் எதிர்க்­கட்சி தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் நேரடி விவா­தத்­திற்கு வர வேண்டும் என எதிர்க்­கட்­சி­களின் எதிர்ப்பு இயக்கம் தெரி­வித்­துள்­ளது.

மேலும் வடமேல் மற்றும் மத்­திய மாகாண சபைத் தேர்­தல்­களில் அர­சாங்­கத்தின் வெற்­றிக்கு தேர்­தல்கள் ஆணை­யா­ளரும் முக்­கிய காரணம் எனவும் அவ் இ­யக்கம் குற்றம் சுமத்­தி­யுள்­ளது.

தேர்­தலில் வெற்றி பெறு­வ­தற்­காக அர­சாங்கம் எவ்­வ­ளவு சூழ்ச்­சி­களை செய்­துள்­ள­தென்­பது அனை­வரும் அறிந்த விட­யமே.

அரச ஊழி­யர்­க­ளையும், அரச வாக­னங்­க­ளையும் பாவித்­தமை தொடர்பில் தேர்­தல்கள் ஆணைக்குழு எவ்­வித நட­வ­டிக்­கை­களும் எடுக்­க­வில்லை.

சூழ்ச்­சி­களின் மூலம் ஆட்­சி­யினைக் கைப்­பற்­றி­விட்டு தகு­தி­யான தலை­வ­ரென ஜனா­தி­பதி கூறு­வதை ஒரு போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

நாட்டின் தகு­தி­யான தலைவர் யார் என்­பதை நிரூ­பிக்க வேண்­டு­மாயின் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ச எதிர்க்­கட்சித் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் நேரடி விவா­தத்­திற்கு வர­வேண்டும்.

மேலும் நாட்டின் உண்மைத் தன்­மை­யினை இன்று எந்­த­வொரு ஊட­கங்­க­ளிலும் முழு­மை­யாக வெளிப்­ப­டுத்­து­வ­தில்லை.

எதிர்க்­கட்­சி­களின் கொள்­கை­க­ளையும் கருத்­துக்­க­ளையும் வெளிப்­ப­டுத்­து­வதில் குறிப்­பாக தமிழ் ஊட­கங்கள் மறுத்து வரு­கின்­றமை கவ­லைக்­கி­ட­மா­னதே.

மேலும் அர­சாங்­கத்தின் உள்­ளேயே விடு­தலைப் புலி­களை வைத்­துக்­கொண்டு எம்மை தீவி­ர­வா­திகள் என அரச தரப்­பினர் குறிப்­பி­டு­வ­தா­னது கேளிக்கையா­கவே உள்­ளது.

விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்­களை வைத்து வடக்கில் பிர­சாரம் செய்து வாக்­குகளைப் பெறலாம் என அர­சாங்கம் நினைத்­தமை தவிடு பொடி­யாகி விட்­டது.
தெற்கில் செய்யும் ஏமாற்று வேலை­களை அர­சாங்கம் வடக்­கிலும் செய்ய முடி­யாது என்­பதை வடக்கு மக்கள் நிரூ­பித்து விட்­டார்கள்.

அதேபோன்று முஸ்லிம் மக்­களின் உரி­மை­களும், சுதந்­தி­ரமும் பறிக்­கப்­பட்டு வரு­கின்­றது.

முஸ்­லிம்­களின் உரி­மைகள் பற்றி பேசும் அதி­காரம் எமக்கு உள்­ளதைப் போன்று தமி­ழர்­க­ளுக்கும் உண்டு.

இதை கேவ­லப்­ப­டுத்தும் வகையில் சில நாசகார சக்­திகள் பேசு­வதை கவ­னத்திற் கொள்­ள ­வேண்­டிய அவ­சியம் இல்லை எனவும் தெரி­வித்தார்.(LW)
Disqus Comments