Saturday, October 19, 2013

புத்தளத்திலிருந்து காலி வரை கடற்கொந்தளிப்பு ; மீனவர்கள் அவதானம்!

(vi) நாட்டில் பல பகுதிகளில் சீரற்ற வானிலை நீடித்து வருவதால் கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.  
கடல் பிராந்தியங்களில் நிலவும் வானிலை தொடர்பில் மீனவர்களுக்கு ஏற்னவே தகவல் வழங்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை புத்தளத்திலிருந்து மாத்தறை ஊடாக காலி வரையான கடற் பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படுமெனவும் வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
Disqus Comments