கலா ஓயாவின் நீர் மட்டம் உயர்வடைந்து வழிந்தோடுவதன் காரணமாக புத்தளம் -
மன்னார் வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் இடர்
முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று (20) காலை எலுவங்குளம் பிரதேசத்தில் கலா ஓயாவில் இரண்டு அடி வரையில் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது.
புத்தளம் - மன்னார் வீதியில் எலுவங்குளம் பிரதேசத்தில் கலா ஓயாவின் நீர் மட்டம் உயர்வடைந்து அப்பிரதேசத்திலுள்ள பாலம் நீரினால் மூடியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் குருநாகல் - வாரியப்பொல பிரதேசத்தில் அதிகப்படியாக 125 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது.
இந்நிலையின் காரணமாக தெதுரு ஓயாவின் நீர் மட்டம் உயர்வடைவதாக புத்தளம் இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று (20) காலை எலுவங்குளம் பிரதேசத்தில் கலா ஓயாவில் இரண்டு அடி வரையில் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது.
புத்தளம் - மன்னார் வீதியில் எலுவங்குளம் பிரதேசத்தில் கலா ஓயாவின் நீர் மட்டம் உயர்வடைந்து அப்பிரதேசத்திலுள்ள பாலம் நீரினால் மூடியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் குருநாகல் - வாரியப்பொல பிரதேசத்தில் அதிகப்படியாக 125 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது.
இந்நிலையின் காரணமாக தெதுரு ஓயாவின் நீர் மட்டம் உயர்வடைவதாக புத்தளம் இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.