Sunday, October 20, 2013

கலா ஓயா நீர்மட்டம் உயர்வு: புத்தளம் - மன்னார் போக்குவரத்து பாதிப்பு

கலா ஓயாவின் நீர் மட்டம் உயர்வடைந்து வழிந்தோடுவதன் காரணமாக புத்தளம் - மன்னார் வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று (20) காலை எலுவங்குளம் பிரதேசத்தில் கலா ஓயாவில் இரண்டு அடி வரையில் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது.

புத்தளம் - மன்னார் வீதியில் எலுவங்குளம் பிரதேசத்தில் கலா ஓயாவின் நீர் மட்டம் உயர்வடைந்து அப்பிரதேசத்திலுள்ள பாலம் நீரினால் மூடியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் குருநாகல் - வாரியப்பொல பிரதேசத்தில் அதிகப்படியாக 125 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது.

இந்நிலையின் காரணமாக தெதுரு ஓயாவின் நீர் மட்டம் உயர்வடைவதாக புத்தளம் இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
Disqus Comments