நாட்டில் இருந்த வெள்ளை வேன் கலாசாரம் தொடர்பில் தான் அறிந்திருந்திருந்தேன். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் அவரது அமைச்சின் கீழ் செயற்பட்ட ஆயுதக் குழுக்களின் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதன் காரணமாகவே நான் நாட்டை விட்டு வெளியேறி அவுஸ்திரேலியா சென்றேன். அப்போது தனது மகள், மனைவியின் நிலைமையை எண்ணி அந்த முடிவை எடுத்தேன் என முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.
வெள்ளை வேன் கடத்தல்களின் பின்னால் இருந்த முக்கிய இராணுவ அதிகாரிகள் தொடர்பில என்னிடம் ஆதாரம் உள்ளது. அக்காலப்பகுதியில் கருணா அம்மான் உள்ளிட்ட ஆயுதக் குழுக்களின் நடமாட்டம் காணப்பட்டது. வெள்ளை வேன் கலாசரம் தொடர்பில் விசாரணை ஒன்று நடத்தப்பட்டால் நான் சாட்சியமளிக்க தயார் எனவும் பிரசாந்த ஜயகொடி மேலும் குறிப்பிட்டார்.
அத்துடன் நான் உயிர் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்து நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் நீதியான விசாரணை ஒன்று நடத்தப்பட்டு தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். தொடர்ந்தும் பொலிஸ் சேவையில் இணைந்து செயற்பட நான் விரும்புகின்றேன் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஒரு வருடமும் ஏழு மாதங்களின் பின்னர் அவுஸ்திரேலியாவில் இருந்து நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் நாடு திரும்பிய முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் இரத்தினபுரி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான பிரசாந்த ஜயகொடி நேற்று மாலை கொழும்பு கலதாரி ஹோட்டலில் செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தினார். அதிலேயே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
வெள்ளை வேன் கடத்தல்களின் பின்னால் இருந்த முக்கிய இராணுவ அதிகாரிகள் தொடர்பில என்னிடம் ஆதாரம் உள்ளது. அக்காலப்பகுதியில் கருணா அம்மான் உள்ளிட்ட ஆயுதக் குழுக்களின் நடமாட்டம் காணப்பட்டது. வெள்ளை வேன் கலாசரம் தொடர்பில் விசாரணை ஒன்று நடத்தப்பட்டால் நான் சாட்சியமளிக்க தயார் எனவும் பிரசாந்த ஜயகொடி மேலும் குறிப்பிட்டார்.
அத்துடன் நான் உயிர் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்து நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் நீதியான விசாரணை ஒன்று நடத்தப்பட்டு தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். தொடர்ந்தும் பொலிஸ் சேவையில் இணைந்து செயற்பட நான் விரும்புகின்றேன் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஒரு வருடமும் ஏழு மாதங்களின் பின்னர் அவுஸ்திரேலியாவில் இருந்து நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் நாடு திரும்பிய முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் இரத்தினபுரி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான பிரசாந்த ஜயகொடி நேற்று மாலை கொழும்பு கலதாரி ஹோட்டலில் செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தினார். அதிலேயே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.