கடந்த காலங்களில் நாட்டில் பாரியளவில் ஊழல் செய்தவர்களை பாதுகாக்கும் செயற்பாட்டில் அரசாங்கத்துக்குள் டீல் காரர்கள் செயற்படுகின்றனரா? என்ற சந்தேகம் எனக்கும் இருக்கின்றது. விசாரணை செயற்பாடுகள் ஏன் தாமதமடைகின்றன என்பது குறித்து நானும் குழப்பத்தில் இருக்கின்றேன் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
எவ்வாறெனினும் கடந்த காலங்களில் ஊழல் செய்தவர்களை சட்டத்தின் முன்கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இந்த அரசாங்கம் நிறைவேற்றும். அதற்கு ஊடகங்களும் உதவவேண்டும். இந்த அரசாங்கத்தை அமைக்க சிவில் அமைப்புக்களும் பங்களிப்பு செய்துள்ளன என்பதனை மறந்துவிடக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
போதைப்பொருள் உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கத்தின் விசாரணைகள் தாமதமடைவதாக மக்கள் குறைகூறுகின்றனரே என்ற ஊடகவியலாளரின் கேள்விக்கு பதலளித்த அமைச்சர்,
எவ்வாறெனினும் கடந்த காலங்களில் ஊழல் செய்தவர்களை சட்டத்தின் முன்கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இந்த அரசாங்கம் நிறைவேற்றும். அதற்கு ஊடகங்களும் உதவவேண்டும். இந்த அரசாங்கத்தை அமைக்க சிவில் அமைப்புக்களும் பங்களிப்பு செய்துள்ளன என்பதனை மறந்துவிடக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
போதைப்பொருள் உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கத்தின் விசாரணைகள் தாமதமடைவதாக மக்கள் குறைகூறுகின்றனரே என்ற ஊடகவியலாளரின் கேள்விக்கு பதலளித்த அமைச்சர்,
அந்த பிரச்சினை எனக்கும் உள்ளது. நாட்டில் அரசாங்கம் மாறினாலும் அரச நிறுவனங்கள் மாறவில்லை. ஊழல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் போதைப் பொருள் குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகள் தாமதமடைகின்றமை எனக்கும் பாரிய சிக்கலாகவே உள்ளது. ஆனால் விடமாட்டோம். இவற்றை முன்கொண்டு செல்வோம். தற்போது நிலைமை மாறுகின்றது. இந்த விடயங்களை நானே எழுப்புவேன். ஊடகவியலாளர்களாகிய நீங்கள் என்னிடம் எழுப்பிய கேள்விகளை நான் உரிய இடத்தில் எழுப்புவேன்.
நாம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். இது அரசியல் கட்சிகளினால் மடடும் அமைக்கப்பட்ட அரசாங்கம் அல்ல. சிவில் அமைப்புக்களும் இந்த அரசாங்கத்தை அமைக்க பங்களிப்பு செய்தன.
மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட அவரிடம் வரப்பிரசாதங்களை பெற்ற அதிகாரிகள் இன்னும் உள்ளனர். அவ்வாறான சிலர் இழுக்கின்றனர் என்பது தெரிகின்றது. அவர்கள் தொடர்பான விபரங்களை விரைவில் நானே வெளியிடுவேன். ஆனால் நாங்கள் பொறுப்புக்கூறுவோம். யாரும் இதனை செய்யாவிட்டால் நான் அவர்களை வெளிப்படுத்துவேன். வெலே சுதா வழங்கிய பணம் தற்போது கடனாக பெறபபட்டதாக கூறப்பட்டுள்ளது. இவ்வாறு பல விடயங்கள் உள்ளன.
சில விடயங்களில் ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் தலையிட்டு செயற்பட்டுள்ளார். இதனை நானும் அனுர குமாரதிசாநாயக்கவும் சம்பிக்க ரணவக்கவும் தேசிய நிறைவேற்று சபையில் எழுப்பினோம். அவன் கார்ட் நிறுவன உரிமையாளருக்கு பிணை கிடைத்துள்ளது. தவறு செய்த யாரையும் விடமாட்டோம். அடுத்த தேர்தலுக்கு முன்னர் சட்டத்தின் முன் கொண்டு வந்து நிறுத்துவோம். தண்டனை பெற்றுக்கொடுப்போம்.
நாம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். இது அரசியல் கட்சிகளினால் மடடும் அமைக்கப்பட்ட அரசாங்கம் அல்ல. சிவில் அமைப்புக்களும் இந்த அரசாங்கத்தை அமைக்க பங்களிப்பு செய்தன.
மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட அவரிடம் வரப்பிரசாதங்களை பெற்ற அதிகாரிகள் இன்னும் உள்ளனர். அவ்வாறான சிலர் இழுக்கின்றனர் என்பது தெரிகின்றது. அவர்கள் தொடர்பான விபரங்களை விரைவில் நானே வெளியிடுவேன். ஆனால் நாங்கள் பொறுப்புக்கூறுவோம். யாரும் இதனை செய்யாவிட்டால் நான் அவர்களை வெளிப்படுத்துவேன். வெலே சுதா வழங்கிய பணம் தற்போது கடனாக பெறபபட்டதாக கூறப்பட்டுள்ளது. இவ்வாறு பல விடயங்கள் உள்ளன.
சில விடயங்களில் ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் தலையிட்டு செயற்பட்டுள்ளார். இதனை நானும் அனுர குமாரதிசாநாயக்கவும் சம்பிக்க ரணவக்கவும் தேசிய நிறைவேற்று சபையில் எழுப்பினோம். அவன் கார்ட் நிறுவன உரிமையாளருக்கு பிணை கிடைத்துள்ளது. தவறு செய்த யாரையும் விடமாட்டோம். அடுத்த தேர்தலுக்கு முன்னர் சட்டத்தின் முன் கொண்டு வந்து நிறுத்துவோம். தண்டனை பெற்றுக்கொடுப்போம்.