Wednesday, March 11, 2015

37 வயது தாயும், 20 வயது மகளும் ஒரே தினத்தில் குழந்தை பிரசவம்

37 வயது தாயும், 20 வயது மகளும் ஒரே தினத்தில் சில நிமிட இடை­வெ­ளியில் குழந்­தை­களை பிர­ச­வித்த சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்பெற்­றுள்­ளது.

புளோ­ரிடா மாநி­லத்தைச் சேர்ந்த அஞ்ஜெலா பட்ரம் என்ற தாயும் தெர­னிஷா பில்லப்ஸ் என்ற மக­ளுமே இவ்­வாறு ஒரே தினத்தில் குழந்­தை­களை பிர­ச­வித்­துள்­ளனர்.
தம்பா பொது மருத்­து­வ­ம­னையில் அஞ்­ஜெலா பெண் குழந்­தையை பிர­ச­வித்து 34 நிமி­டங்­களில் தெர­னிஷா ஆண் குழந்­தையை பிர­ச­வித்­துள்ளார்.
அஞ்­ஜெ­லாவின் குழந்­தைக்கு ராய எனவும் தெர­னி­ஷாவின் குழந்­தைக்கு ஜெரி மிசோட் எனவும் பெயர்கள் சூட்­டப்­பட்­டுள்­ளன.
தமது பிர­ச­வங்கள் குறைந்த நாட்கள் வித்­தி­யா­சத்தில் இடம்பெற­வுள்­ளதை முன்கூட்­டியே அறிந்­தி­ருந்த போதும், ஒரே தினத்தில் சில நிமிட வித்­தி­யா­சத்தில் தாம் குழந்­தை­களை பிர­ச­விக்­க­வுள்ளோம் என எதிர்­பார்த்­தி­ருக்­க­வில்லை என அஞ்­ஜெ­லாவும் தெர­னி­ஷாவும் தெரி­வித்­துள்­ளனர்.அஞ்ஜெலாவுக்கு தெரனிஷாவை உள்ளடக்கி ஏற்கனவே 4 பிள்ளைகள் உள்ளனர்.
Disqus Comments