Tuesday, March 3, 2015

தேசியக் கொடிக்கு இறக்கி சிங்ஹலே கொடியையேற்றியமையினால் தலதாவில் பதற்றம்.

தேசிய அரசாங்கம், நல்லிணக்கம், நல்லாட்சி என முன்னேரிக் கொண்டிருக்கும் அரசுக்கு சவால் விடுக்கும் வகையில் பொது பலசேனாவின்
சிங்ஹலே தேசக் கொடியை தலதா மாளிகையில்  ஏற்றுவதற்கு இடம்பெற்ற முயற்சியினால்  கண்டி தலதா மாளிகை வளாகத்தில்  பதற்ற நிலையொன்று தோன்றியுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. 

பௌத்த துறவிகள் குழுவொன்றின் தலைமையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு அங்கு விரைந்த  பொலிஸார்  இந்நடவடிக்கையைத் தடுத்துள்ளனா். 

இதனால் இரு தரப்புக்கும் இடையில் தரப்புக்குமிடையில் பதற்ற நிலை தோன்றியுள்ளதும் தோ்தலை முன் வைத்து பேரினவாத பொதுபல சேனாதலையெடுக்க ஆரம்பித்திடுப்பதும் ஆறாம் திகதி கண்டியில் மஹிந்த ஆதரவுக் கூட்டம் இடம்பெறவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.




Disqus Comments