Thursday, July 23, 2015

9 வருடங்களின் பின் இலங்கை மண்ணில் ஒரு நாள் தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்

ஒன்பது வருடங்களின் பின்னர் இலங்கை மண்ணில் பாகிஸ்தான் அணி ஒரு நாள் தொடரில் வெற்றி பெற்றுள்ளது.
நேற்று (22) நடை பெற்ற இலங்கை அணிக்கு எதிரான 4 ஆவது சர்வதேச ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
கொழும்பு ஆர் . பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன் அடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 256 ஓட்டங்களை பெற்றது .
லஹிரு திரிமான்ன 90 ஓட்டங்களை பெற்றார்.
257 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 40.5 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கனை அடைந்து .
அஹமட் செஷாட் 95 ஓட்டங்களை பெற்றார்.
பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3 இற்கு 1 என்ற ரீதியில் தொடரில் முன்னிலையில் உள்ளது .
இதனடிப்படையில் பாகிஸ்தான் அணி 9 வருடங்களின் பின்னர் இலங்கையில் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது
Disqus Comments