Sunday, July 5, 2015

சுதந்திரக் கட்சி குழுவொன்று ஐ.தே.க.யுடன் இணைய பேச்சுவார்த்தை

அர்ஜுன ரணதுங்க தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரபல குழுவொன்று ஐக்கிய தேசியக் கட்சியில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஒரு குழுவாகச் சென்று ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொள்வது தொடர்பில் தற்பொழுது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்பாளர் பட்டியலில் அனுமதி வழங்கப்பட்டதனால் இந்த தீர்மானத்துக்கு வந்துள்ளதாக அவ்வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. (மு)
Disqus Comments