Saturday, October 31, 2015

இனி சீனாவில் ஒரு குடும்பத்துக்கு ஒன்றல்ல இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.!!!

சீனா­வா­னது அந்­நாட்டில் பல தசாப்த கால­மாக நடை­மு­றை­யி­லி­ருந்த குடும்­பத்­துக்கு ஒரு பிள்ளை என்ற கொள்­கையை முடி­வுக்கு கொண்டு வரு­வ­தற்குத் தீர்­மா­னித்­துள்­ள­தாக அந்­நாட்டு அர­சாங்க ஊட­க­மான ஸின்­ஹுவா செய்திச் சேவை தெரி­விக்­கி­றது.

பொது­வு­டைமை கட்­சியால் வெளி­யி­டப்­பட்ட அறிக்­கையின் பிர­காரம் தற்­போது தம்­ப­தி­யி­ன­ருக்கு தலா இரு குழந்­தை­களைப் பெற்றுக் கொள்­வ­தற்கு அனு­ம­தி­ய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது.

குடும்­பத்­துக்கு ஒரு குழந்­தை­யென்ற சர்ச்­சைக்­கு­ரிய கொள்கை 1979 ஆம் ஆண்டில் சனத்­தொகை வளர்ச்சி வேகத்தை கட்டுப்­ப­டுத்தும் நோக்கில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

இந்தக் கொள்கை கார­ண­மாக சுமார் 400 மில்­லியன் பிறப்­புகள் இடம்­பெ­று­வது தடுத்து நிறுத்­தப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில் சீனாவின் மொத்த சனத்­தொ­கையில் இளை­ஞர்­களின் தொகை வீழ்ச்சி கண்டு வயோ­தி­பர்­களின் தொகை அதி­க­ரித்­த­தை­ய­டுத்து அந்தக் கொள்­கையை மாற்ற வேண்­டிய நிர்ப்­பந்­தத்­திற்கு அந்­நாடு தற்­போது தள்­ளப்­பட்­டுள்­ளது.

தற்­போது சீனாவின் சனத்­தொ­கையில் சுமார் 30 சதவீதத்தினராக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உள்ளனர். அந்நாட்டின் மொத்த சனத்தொகை 1.36 பில்லியனாகும்.

Disqus Comments