புத்தளம் பிரதேச சபைக்குற்பட்ட மதுரங்குளி நகரில் புதிய இருமாடிக் கடைத் தொகுதிகள் நிருமாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த புதிய கடைத் தொகுதிகளின் நிருமாணப்பணிகளுக்கென 5 கேடி ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் இருமாடிக் கடைத்தொகுதி நிருமாணிக்கப்படவுள்ளதுடன், கீழ் மாடியில் 13 கடைகளும், மேல் மாடியில் 13 கடைகளுமாக மொத்தமாக 26 கடைத்தொகுதிகள் அமக்கப்படவுள்ளன.
ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்படும் குறித்த நிருமாணப்பணிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் நிறைவடையவுள்ளன. மதுரங்குளி நகரில் மிகவும் பழமைவாயந்த 11 கடைகள் முற்றாக அகற்றப்பட்ட அந்த இடத்திலேயே புதிய கடைத்தொகுதிகள் அமைக்கப்படவுள்ளதுடன், அதன் பணகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த 11 கடைகளின் உரிமையாளர்களும் தற்காலிகமாக வாடகைக்கு கடைகளைப் பெற்று தமது வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த கட்டடத் தொகுதியின் நிருமாணப்பணிகள் நிறைவடைந்ததும், மேற்குறிப்பிட்ட 11 கடைகளின் உரிமையாளர்களுக்கு புதிய கடைத்தொகுதியில் கேள்வி மனுக்கோரலின்றி, கடைகள் வழங்கப்படுவதுடன், ஏனைய கடைகள் கேள்வி மனுக் கோரல் மூலம் வழங்கப்படவுள்ளதாக புத்தளம் பிரதேச சபையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
(நன்றி - விடியல் இணையம்)