பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளை முறையான தர நிர்ணயத்திற்கு உட்படுத்த வேண்டும் என்று கல்வி கல்விசாரா ஊழியர்களின் சங்கம் கூறியுள்ளது.
தற்சமயம் 7600 இற்கும் அதிகமான பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலைகள் நடத்திச் செல்லப்படுவதாக அந்த சங்கத்தின் செயலாளர் அஜித் கே திலகரட்ன தெரிவித்தார்.
இவை எந்தவித முறையான நெறிப்படுத்தலும் இன்றி நடத்திச் செல்லப்படுவதாக அவர் கூறினார்.
(அத தெரண தமிழ்)