Tuesday, May 3, 2016

அடுத்த மாதம் முதர் அனுமதிப் பத்திரமின்றி தொலைபேசி விற்பவர்களுக்கு ஆப்பு.


அனுமதிப் பத்திரம் இன்றி தொலைபேசிகள் மற்றும் அதன் பாகங்களை விற்பனை செய்யும் நிலையங்களை முற்றுகையிட, தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 

அடுத்த மாதம் முதல் குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக, அந்த ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது. 

கையடக்கத் தொலைபேசி மற்றும் அதன் பாகங்களை விற்பனை செய்யும் இடங்களை தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவில் பதிவு செய்ய வேண்டும். 

எனினும் சில இடங்கள் அனுமதிப் பத்திரம் இன்றி செயற்பட்டு வருவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. 

எதுஎவ்வாறு இருப்பினும் அவ்வாறான இடங்களை பதிவு செய்ய மே மாதத்திற்குள் வாய்ப்பு வழங்க தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 

இதன்படி, ஜூன் மாதம் முதல் நாடு பூராகவுமுள்ள சட்ட விரோத கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் அதன் பாகங்களை விற்பனை செய்யும் நிலையங்களை முற்றுகையிடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. 

(அத தெரண தமிழ்)
Disqus Comments