Saturday, June 25, 2016

6 கோடி ரூபா பெறுமதியான ஹெரோய்ன் போதைபொருளுடன் பாகிஸ்தான் பிரஜை கைது


60 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோய்ன் போதைபொருளுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சுமார் 5 கிலோகிராம் ஹெரோய்ன் போதைபொருளுடன் அவர் கட்டுநாயக்க பண்டாராநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இலங்கை பாகிஸ்தானுக்கிடையில் கட்டார் ஊடாக மேற்கொள்ளப்படும் பாரிய போதைப் பொருள் கடத்தலின் பிரதான சந்தேக நபரே இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். 

போதைப் பொருள் ஒழிப்பு விஷேட திட்டத்தின் மூலம் கடந்த மூன்று நாட்களில் 07 கிலோ 50 கிராம் ஹெரோய்ன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது. 
Disqus Comments