சாய்ந்தமருதுவை தனியான நகரசபையா க பிரகடனப்படுத்துமாறு நாம் வி டுத்த கோரிக்கைக்கு செவிசாய்த் து அதற்கான வாக்குறுதியை தந்து ள்ளமைக்கு உள்ளூராட்சி மாகாணசபை கள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிற் கு தனது நன்றிகளை தெரிவிப்பதோடு கல்முனை மாநகரசபை உள்ளடங்கிய பி ரதேசங்களிலும் அதனை அண்டியுள்ள இடங்களிலும் எந்தவொரு சமூகத்தி ற்கும் எந்தவோர் ஊருக்கும் பாதி ப்பு வந்திடாத வகையில் கருமங் களை மேற்கொள்ளுமாறும் அவர் வேண் டினார். குறிப்பாக மருதமுனைக்கெ ன தனியான சபையொன்றையும் கல்முனை யில் தமிழ் மக்கள் அதிகமாக வாழு மிடங்களை ஒன்றுசேர்த்து அவர்களு க்கான ஒரு சபையொன்றினையும் உரு வாக்குமாறும் அமைச்சர் ரிஷாட் வே ண்டுகோள் விடுத்தார்.
உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச் சின் குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூ றியதாவது,
முல்லைத்தீவு மாவட்டத்தில் புது க்குடியிருப்பு பிரதேச சபைஅதி களவு சனத்தொகையையும் பரப்பளவையு ம் கொண்ட சபையாகும். எனவே அந் தப் பிரதேச சபையை புதுக்குடியி ருப்புப் பிரதேச சபை, ஒட்டுச்சு ட்டான் பிரதேசசபை என இரண்டாகப் பிரித்து இரண்டு சபைகளை ஏற்படு த்தி தருமாறும் வேண்டினார்.
அதே போன்று மன்னாரில் பெரிய நி லப்பரப்பைக் கொண்ட மாந்தை மேற் கு சபையைப் பிரித்து அங்கு இன் னுமொரு பிரதேச சபையாக மடுப்பி ரதேச சபையை உருவக்குமாறும், மு சலிப் பிரதேச சபையின் எல்லையில் இருக்கும் மறிச்சுக்கட்டியை பி ரதேச சபையாக உருவாக்க நடவடிக்கை எடுக்குமாறும் சிலாவத்துறையையு ம் அவை சார்ந்துள்ளஇடங்களையும் உள்ளடக்கி சிலாவத்துறை நகரசபையா கவும் பிரகடனப்படுத்துமாறு கோரி க்கை விடுத்தார்.
திருமலை மாவட்டத்தில் மூதூர் பி ரதேச சபை, சாம்பூர், தோப்பூர் ஆ கிய பகுதிகளை உள்ளடக்கிய பெரிய பிரதேச சபையாகும். எனவே அங்கு த மிழ் மக்களுக்கென தனியான ஒருசபை யையும் தோப்பூர் மக்களுக்கு ஒரு பிரதேச சபையையும் மூதூரை நகர ச பையாகவும் ஆக்க வேண்டும் என்றா ர்.
குச்சவெளி பிரதேச சபையும் பாரிய நிலப்பரப்பைகொண்டதாக உள்ளது. பு ல்மோட்டையையும் இந்தப் பிரதேசசபை தன்னகத்தே கொண்டுள்ளதால் அதனை யும் இரண்டாகப் பிரித்து இரண்டு சபைகளை உருவாக்குமாறு வேண்டுகோ ள் விடுக்கின்றேன் என்றார்.
அத்துடன் புத்தளம் மன்னார் வவு னியா ஆகிய நகர சபைகளை மாநகர சபையாக பிரகடனப் படுத்துமாறும் சம்மாந்துறைப்பிரதேச சபையை நகர சபையாக மாற்றுமாறும் அமைச்சர் வே ண்டிக் கொண்டார்.
அது மாத்திரமன்றி கற்பிட்டி பி ரதேச சபையை கற்பிட்டி நகரசபையாக மாற்றி அந்தப்பிரதேசத்திலுள்ள காயாமோட்டையை பிரதேச சபையாக மா ற்றுமாறும் கோரினார்.