அண்மையில் விபத்தில் உயிரிழந்த சத்தியநாதன் சிவதுர்க்கா என்ற மாணவியே உயர்தர பரீட்சையில் கணித பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலாமிடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியரான தனது சிறிய தாயாருடன் வாகனத்தில் கொழும்பு நோக்கி சென்று கொண்டிருக்கையில் குருணாகலில் இடம்பெற்ற விபத்தில் சிவதுர்க்காக உயிரிழச்துள்ளார்.
வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவியான சத்தியநாதன் சிவதுர்க்கா என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராகும்.
மிகச்சிறந்த பெறுபேற்றை பெறக்கூடிய மாணவி என எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட இம் மாணவி மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினை பெற்றுள்ளார்.