கர்ப்பமடைந்து 9 மாத காலமாகும் வரை தான் கர்ப்பமடைந்துள்ளதை அறியாத பெண்ணொருவர் 14.1 இறாத்தல் நிறையுடைய இராட்சத குழந்தையொன்றை பிரசவித்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
புளோரிடா மாநிலத்தில் டம்பா நகரைச் சேர்ந்த மக்ஸன்ட்ரா போர்ட் என்ற பெண்ணே இவ்வாறு இராட்சத குழந்தையை அந்நகரிலுள்ள சென் ஜோசப்ஸ் பெண்கள் மருத்துவமனையில் பிரசவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 29 ஆம் திகதி பிறந்த இந்த குழந்தை தொடர்பில் அமெரிக்க ஊடகங்கள் சனிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
இந்த குழந்தைக்கு அவெரி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.மக்ஸன்ட்ராவுக்கும் அவரது கணவர் அலென் டென்டனுக்கும் ஏற்கனவே ஒரு வயது மகனும் 5 வயது மகளும் உள்ளனர்.
