அம்பலந்தோட்டை பகுதியில் இன்று முற்பகல் நடைபெற்ற விளையாட்டு போட்டியொன்றில் பங்குப்பற்றிய பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
பாடசாலை மரதன் ஓட்டப்போட்டியில் பங்குப்பற்றிய சந்தர்ப்பத்தில் திடீர் சுகயீனமுற்ற நிலையில், இந்த மாணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
15 வயதான மாணவன் ஒவருனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.