Monday, March 9, 2015

பங்களாதேஷில் தொடர் குண்டு வெடிப்புக்கள் மயிரிழையில் உயிர்தப்பினார் பிரதமர் ஹஸினா

பங்­க­ளாதேஷ் பிர­தமர் ஷெய்க் ஹஸினா குண்டு தாக்­கு­தல்­க­ளி­லி­ருந்து மயி­ரி­ழையில் சனிக்­கி­ழமை உயிர்தப்­பி­யுள்ளார்.
தலை­நகர் டாக்­கா­வி­லுள்ள கர்வன் பஸார் பிராந்­தி­யத்தில் ஹஸி­னாவின் வாகன தொட­ர­ணிகள் கடந்து சென்­ற­தற்கு 10 நிமி­டங்­களின் பின்னர் பல குண்­டுகள் வெடித்­துள்­ளன.
தலை­ந­கரில் சுஹ்­ர­வர்டி உடியன் பிராந்­தி­யத்தில் அந்­நாட்டின் தந்­தை­யான ஷெய்க் முஜிபுர் ரஹ்மான் 1971 ஆம் ஆண்டு ஆற்­றிய வர­லாற்று முக்­கி­யத்­துவம் மிக்க உரையைக் குறிக்கும் வகையில் ஆளும் அவாமி லீக் கட்­சியால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த ஊர்­வ­லத்தில் கலந்து கொள்ள ஹஸினா சென்ற வேளை­யி­லேயே இந்த குண்டு வெடிப்­புக்கள் இடம்­பெற்­றுள்­ளன.
மேற்­படி குண்டு வெடிப்­புக்­களில் சிக்கி ஒரு பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் காய­ம­டைந்­துள்ளார்.
கடந்த ஜன­வரி 5 ஆம் திகதி பங்­க­ளாதேஷ் எதிர்க்­கட்­சி­யான பி.என்.பி. கட்சி தலை­மை­யி­லான 20 கட்­சி­களின் கூட்­ட­மைப்பால் வீதி மறியல் போராட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து இடம்பெற்ற வன் முறைகளில் 100க்கும் அதிகமானோர் உயி ரிழந்துள்ளனர்.
Disqus Comments