Sunday, February 28, 2016

நாமல் ராஜபக்ஷ உட்பட 8 பீ.எஸ்.டீ. அதிகாரிகள் கைது?

(DAILY CEYLON) பிரபல ரகர் வீரர் மொஹமட் தாஜுதீன் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யது கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் ஹம்பாந்தோட்டைப் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் முன்னாள் அதிகாரிகள் எட்டுப் பேர் ஆகியோரை கைது செய்வதற்கான விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.
அரசியல்வாதியொருவரின் உத்தரவின் பேரில் கடந்த அரசாங்கத்தில் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினால் தாஜுதீன் கடத்தப்பட்டு மிருகத்தனமாக சித்திரவதை செய்யப்பட்டு, வாகனத்தில் எரிக்கப்பட்டதற்கான சாட்சிகள் பல இதுவரையில் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாஜுதீனின் கொலையை வழிநடாத்திச் சென்றிருப்பது, ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் சேவையாற்றி உயர் அரசியல்வாதியொருவரின் சாரதியொருவர் என்பது அறியவந்துள்ளது.
கடந்த அரசாங்கம் இவரின் மரணம் ஒரு திடீர் விபத்தினால் ஏற்பட்டது என தெரிவித்திருந்தது. இருப்பினும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர்தான் இது கொலையென நிரூபிக்கப்பட்டது எனவும் இன்றைய சிங்கள தேசிய நாளிதழொன்று அறிவித்துள்ளது.  (மு)
Disqus Comments