ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தேசிய அமைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாயிஸ் அவர்கள் மீண்டும் முஸ்லிம் காங்கிரசில் இணைந்தமையை முன்னிட்டு மாபெரும் வரவேற்பு நிகழ்வு இன்று(11-11-2016) வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையின் பின்னா் புத்தளத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்து சிறப்பித்தார்கள். அத்துடன் வடமேல் மாகாண சபை உறுப்பினா் SHM. நியாஸ் அவா்களும், கடந்த பாராளுமன்ற முஸ்லிம் காங்கிரஸ் பைரூஸ் அவா்களும் இன்னும் பிராந்திய கிராம இணைப்பாளா்கள் உட்பட பெருந்திரளான மக்களும் கலந்து கொண்டனா்.




