மாளிகைக்காடு லத்தீப் வீதியில் வசித்து வந்தவரும் தற்போது தொழில் நிமிர்த்தம் கட்டார் நாட்டில் இருப்பவருமான முஹம்மது சப்றாஸ் எனும் 25 வயது இளைஞர் திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக கடந்த சில நாட்களாக கட்டாரில் உள்ள அல் ஹமாட் வைத்திய சாலையின் அதி தீவிர சிகைச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
திருமனமாகிய இவருக்காகவும் இவரது மனைவி, குழந்தைகளுக்காகவும் அல்லாஹ்விடம் அனைவரும் துஆ செய்து இவரின் ஆயுளை நீடிக்க இறைவனை வேண்டுமாறு மிகவும் தாழ்மையுடன் வேண்டுகிறோம்.
(Kalmunaitoday.com)
