தெங்கு பொருள் ஏற்றுமதி மூலம் 56 கோடி அமெரிக்க டொலர் அந்நிய செலவாணி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
புண்ணாக்கு, விநாகிரி மற்றும் தேங்காய் எண்ணெய் என்பன அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டதாக பெருந்தோட்ட அமைச்சு தெரிவித்துள்ளது.
வருடம் ஒன்றிற்கு 300 கோடி தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படுவதாக அமைச்சின் புள்ளி விபரங்கள் குறிப்பிடுகின்றது. எதிர்வரும் காலங்களில் மேலும் அதிகரிப்பதற்கான சாதகமானநிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
