சட்ட விரோதமான முறையில் மதுபான போத்தல்கள் வைத்திருந்த இலங்கை பிரஜை ஒருவர் குவைத் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இலங்கைப் பிரஜையிடமிருந்து 64 மதுபான போத்தல்கள் கைப்பற்றுப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் கைது செய்யப்பட்டு அவரது இகாமா தொடா்பாக பரிசோதனை செய்த போது அது புதுப்பிக்கப்படாமல் காலாவதியாக இருப்பதாகவும், அவா் குவைத்தில் சட்ட விரோதமாக இதுவரை காலம் தங்கியிருந்து மதுபான விற்பனை ஈடுபட்டு இருந்துள்ளார் என்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
