Sunday, December 16, 2012

2013 ஜனவரி முதல் புத்தளத்தில் சந்தை சனிக்கிழமையாம்.



புத்தளம் நகரில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெறுகின்ற வாராந்த சந்தை அடுத்த வருடம் (2013ஆம் ஆண்டு) ஜனவரி மாதத்திலிருந்து சனிக்கிழமைகளில் நடைபெறுமென புத்தளம் நகரசபைத் தலைவர் கே.ஏ.பாயிஸ் தெரிவித்தார்.

புத்தளம் நகர வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் புத்தளம் பொதுநூலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் இதனைக் கூறினார்.

அத்துடன், எதிர்வரும் ஜனவரி மாதத்திலிருந்து புத்தளம் நகரின் நாளாந்தச் சந்தை இரவு 12 மணிவரை திறந்திருக்கும். இந்நிலையில், தூரவுள்ள பயணிகளின் நலன் கருதி கற்பிட்டி உட்பட ஏனைய பிரதேசங்களுக்கும் இரவு நேர பஸ் சேவை நடத்தப்படுமெனவும்  புத்தளம் நகரசபைத் தலைவர் தெரிவித்தார்.

இதன்போது புத்தளம் நகரின் குருநாகல் மற்றும் கே.கே.வீதிகளின் ஒரு வழிப் போக்குவரத்து தொடர்பிலும் ஆராயப்பட்டது.

இக்கலந்துரையாடலில் புத்தளம் நகரசபை உறுப்பினர்கள், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நன்றி தமிழ்மிற்றா்.
Disqus Comments