Friday, May 10, 2013

மதுரங்குளியில் 1,000 ரூபா தாளினை அச்சிட முயன்றோர் கைது

(TM)புத்தளம், மதுரங்குளி பிரதேசத்தில் சட்டவிரோதமாக 1,000 ரூபா தாளினை அச்சிட தயாராகவிருந்த சந்தேக நபர்கள் 4 பேர் புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் புத்தளம், நுவரெலியா ஆகிய பிரதேசங்களை சேர்ந்த தலா ஒருவரும் கந்தான பிரதேசத்தினை சேர்ந்த இருவரும் ஆவர். இவர்களிடமிருந்து இரசாயன திரவியங்கள், நான்கு கையடக்க தொலைப்பேசிகள், முச்சக்கர வண்டி உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

குறித்த சந்தேக நபர்கள் மூன்று இலட்சம் ரூபா பணத்தினை பெற்றுக்கொண்டு பத்து இலட்சம் ரூபா கள்ள நோட்டினை வழங்குவதாக கிடைத்த தகவலினையடுத்து இச் சுற்றி வளைப்பு நடைப்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Disqus Comments