கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலி விடுதலை செய்யப்பட்டுள்ளார் என அவருடைய சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தெரிவித்தார்.
தற்போது இவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை, அஸாத் சாலி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.