Friday, May 17, 2013

IPL - 2013 சூதாட்டம் மூவருக்கும் ஆயுட்கால தடை விதிக்கப்படலாம்??

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம்மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீட் சவான் ஆகிய 3 வீரர்களும் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டு டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்தால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) அதிர்ச்சி அடைந்து உள்ளது. விசாரணை முடியும் வரை அவர்களை சஸ்பெண்டு செய்துள்ளது.

கிரிக்கெட்டில் ஊழலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று கிரிக்கெட் வாரியம் எச்சரித்து உள்ளது. இதனால் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீசாந்த், சண்டிலா, சவான் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. 3 பேருக்கு ஆயுள்கால தடை விதிக்கப்படுகிறது.

3 பேரில் ஸ்ரீசாந்த் இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கிறார். மற்ற இருவரும் உள்ளூர் போட்டியில் விளையாடியவர்கள். கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு தலைவரான ரவி சவானி இந்த ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்துகிறார். அவரது தலைமையிலான ஊழல் தடுப்பு குழு விசாரணை நடத்தி கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் விசாரணை அறிக்கையை சமர்பிப்பார்.

ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு கிரிக்கெட் வாரிய துணைத் தலைவரும், பாரதீய ஜனதாவை சேர்ந்த வருமான அருண் ஜேட்லி  தலைவராக உள்ளார். ஒழுங்கு நடவடிக்கை குழு இந்த 3 பேர் மீது ஆயுள்கால தடையை விதிக்கும் என்று தெரிகிறது.
Disqus Comments