Tuesday, June 25, 2013

புத்தளம் பிரதேச செயலாளா் மீது கல்லடி வாசிகள் தாக்குதல்

(MS) புத்தளம் பிரதேச செயலாளர் (AGA) மற்றும் அவரது சாரதி ஆகியோர் கல்லடி பிரதேசவாசிகளின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் இன்று காலை 11.20 மணியளவில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் கல்லடி பகுதியில், யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளமையை கண்டித்து கல்லடி பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

இவ் ஆர்பாட்டத்தை கேள்வியுற்று குறித்த இடத்திற்கு சென்றபோதே பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம்.மளிக் மீது ஆர்பாட்டக்காரர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, பிரதேச செயலாளரின் சாரதிக்கும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த நிலையில் மேற்படி இருவரும் புத்தளம் தளவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காயமடைந்த பிரதேச செயலாளரையும் அவரைது சாரதியையும் பாராளுமன்ற உறுப்பினா் விக்டா் என்டனி, வடமேல் மாணாண சபை உறுப்பினா்களான  றியாஸ், தாஹிர், புத்தளம் நகர பிதா பாயிஸ்,  கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினா் முஸம்மில் புத்தளம் பெரிய பள்ளிவாயல் தலைவா் மற்றும் நிர்வாக சபை உறுப்பினா்கள் ஆகியோர் வந்து நலம் விசாரித்தமையை அவதானிக்க முடிந்தது.


Disqus Comments