(NF)நீர்ப்பாசன அலுவலக கள உத்தியோகத்தரை தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம்
தொடர்பில் கைதுசெய்யப்பட்ட கருவலகஸ்வெவ பிரதேச சபையின் தலைவர் எதிர்வரும்
9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஆனமடுவை நீதவான் நீதிமன்றல் நேற்று பிற்பகல் சந்கேதநபர் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான நீர்ப்பாசன கள உதவி உத்தியோகத்தர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
தப்போவ பகுதியில் நேற்றிரவு 7 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குளமொன்றின் நீரைத் திறந்துவிடுவது தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையே
தாக்குதலுக்கு காரணமாக அமைந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்