Wednesday, August 21, 2013

ஏன் சர்வாதிகாரி என்கின்றனர் என்று எனக்குத் தெரிவதில்லை - ஜனாதிபதி

எவரும் எந்தவொரு விடயத்தையும் பகிரங்கமாக தெரிவிப்பதற்கான உரிமை தற்போது இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கம்பனை தொழுவ பகுதியில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மக்கள் சந்திப்பு பிரதமர் D.M. ஜயரத்ன தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது ஜனாதிபதி மேலும் கருத்து தெரிவிக்கையில்...

'இங்கு ஜனநாயகம் இல்லை என்று சிலர் கூறுகின்றனர். வெளிநாடுகளுக்குச் சென்று நான் சர்வாதிகாரி என்று கூறுகின்றனர். ஏன் சர்வாதிகாரி என்கின்றனர் என்று எனக்குத் தெரிவதில்லை. இந்த 3,4 பேர் ஏன் சர்வதிகாரி என்று கூறுகிறார்கள் என்று நானும் தேடிக் கொண்டிருக்கிறேன். மேடைகளில் இருந்து கொண்டு பகிரங்கமாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்,' என்றார் ஜனாதிபதி.
Disqus Comments