Saturday, September 7, 2013

போப் இலங்கை வருகிறார்


போப் பிரான்சிஸ் இலங்கைக்கு வருகிறார் என்பதை கொழும்பு ஆயர் அலுவலகம் உறுதிப்படுத்தியிருக்கிறது.

இந்த ஆண்டு முன்னதாக இலங்கை ஜனாதிபதி புதிய போப்பை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருப்பதாக ஜனாதிபதி அலுவலகம் கூறியிருந்தது.

இது தொர்பில் பிபிசி வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொழும்பு ஆயருக்காகப் பேசவல்ல அருட்தந்தை பெனெடிக்ட் ஜோசப், பேசுகையில், ' திருத்தந்தை இலங்கைக்கு வருகிறார் என்பதை வத்திக்கான் உறுதிப்படுத்தியிருக்கிறது. இது வரை எங்களுக்கு அவர் விஜயம் குறித்த நாட்கள் அல்லது வேறு விவரங்கள் தரப்படவில்லை. அவர் வருகிறார் என்பது அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை மட்டும்தான் என்னால் சொல்ல முடியும். 

அவரது விஜயம் குறித்த மேல் விவரங்களை நாங்கள் விவாதித்துக்கொண்டிருக்கிறோம். இந்த விஜயம் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் நடக்கிறதா என்பதையும் என்னால் சொல்ல முடியாது. இந்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை',என்றார்.

1970ல் அப்போதைய போப் , பிலிப்பைன்ஸ் செல்லும் வழியில் , இலங்கையில் இரண்டு மணி நேரங்கள் தங்கியிருந்தார். அதற்குப் பின்னர் 1995ல் போப் ஜான் பால், இலங்கைக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Disqus Comments